சென்னை: இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 5 மணிக்கு சென்னையில் காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கும். காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் தொடங்கும் பேரணி போர் நினைவுச் சின்னம் அருகே நிறைவுபெறும். இந்திய ராணுவத்திற்கு ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிபடுத்த வேண்டிய தருணம் இது. தமிழ்நாட்டு மக்கள் பேரணியில் பங்கேற்று ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.