இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு

6 months ago 17

மும்பை: வர்த்தகம் தொடங்கிய போது உயர்வுடன் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் சரிவுடன் முடிந்தன. தொடர்ந்து 6-வது நாளாக சந்தையில் பங்குகளின் விலை குறைந்து கொண்டே செல்வதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிந்து 77,580 புள்ளிகளானது. தொடக்க நேரத்தில் 364 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் நண்பகலில் 266 புள்ளிகள் குறைந்து, இறுதியில் 111 புள்ளிகள் சரிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. தேசியப்பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 26 புள்ளிகள் குறைந்து 23,533 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 29 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின.

The post இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு appeared first on Dinakaran.

Read Entire Article