இந்திய ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது: மத்திய ஜவுளித்துறை அமைச்சர்

3 months ago 16

சென்னை: இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

சென்னை தரமணி தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் ஆய்வு செய்தார். மாணவர்கள் வடிவமைத்த கைவினைப் பொருட்கள், ஆடைகளைப் பார்வையிட்டார். இதன்பிறகு, செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது: இந்தக் கல்வி நிறுவனத்தில் இருந்து பயிற்சி முடித்து வெளியேறும் மாணவர்கள் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம் என்பது நமது நாட்டின் பெருமை.

Read Entire Article