இந்திய கைப்பந்து சம்மேளன புதிய தலைவராக வீரேந்தர் கன்வார் தேர்வு

4 hours ago 2

புதுடெல்லி,

இந்திய கைப்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் பல்வேறு பிரச்சினைகளால் தள்ளி போய் கொண்டே இருந்தது. இதனால் இடைக்கால கமிட்டி கைப்பந்து சம்மேளனத்தை நிர்வகித்தது. இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்திய கைப்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணா பாத் தேர்தலை நடத்தினார். விளையாட்டுத்துறை, இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச கைப்பந்து சங்கத்தின் பிரதிநிதிகள் தேர்தல் பார்வையாளர்களாக செயல்பட்டனர்.

இதில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த கைப்பந்து சங்கத்தின் நிர்வாகிகள் மொத்தம் 66 பேர் ஓட்டு போட்டனர். இமாசலபிரதேசத்தை சேர்ந்த வீரேந்தர் கன்வார் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மொத்தம் 33 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாகாலாந்தை சேர்ந்த பிரேம் சிங் பஜோர் 31 ஓட்டுகள் பெற்று தோல்வியை தழுவினார். 

Read Entire Article