இந்திய இளைஞர்கள் புத்தாக்கம், தொழில்நுட்பத்தில் சிறந்தவர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

3 months ago 14

புதுடெல்லி: “இந்திய இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்பத்தில் சிறந்தவர்கள்” என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கிட்ஹப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாமஸ் டோம்கே, “உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது” என தெரிவித்திருந்தார். அதை மேற்கோள்காட்டி பிரதமர் தன் எக்ஸ் பதிவில், “நான் இந்தியா மீது கொண்டுள்ள அன்பை நிச்சயமாக வௌிப்படுத்த வேண்டும்.

தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இது உலகளாவிய தொழில்நுட்ப மையமாக இந்தியா வளர்வதை தவிர்க்க முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. செயற்கை நுண்ணறிவு திட்டங்களுக்கு இந்தியா அதிக பங்களிப்பாளர்களை கொண்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் என வரும்போது இந்திய இளைஞர்கள் தலைசிறந்தவர்களாக உள்ளனர்” என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

The post இந்திய இளைஞர்கள் புத்தாக்கம், தொழில்நுட்பத்தில் சிறந்தவர்கள்: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article