இடம் வாங்கியும் 75 வருடங்களாக கட்டப்படாத கட்சி அலுவலகம்! - குமுறும் கும்பகோணம் காங்கிரஸார்

16 hours ago 2

காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழுத்தி அழுத்தி சொல்கிறார். ஆனால், யதார்த்தம் அப்படி இல்லை என்று சொல்லும் கும்பகோணம் காங்கிரஸார், அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளாகியும் கட்டப்படாமல் கிடக்கும் கும்பகோணம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை அதற்கு எவிடென்ஸாக காட்டுகிறார்கள்.

சு​மார் 75 வருடங்​களுக்கு முன்​பு, மருத்​து​வர் மகாலிங்​கம் என்​பவர் கும்​பகோணம் நகர காங்​கிரஸ் கமிட்​டிக்கு அலு​வல​கம் கட்​டு​வதற்​கான முயற்​சி​யில் இறங்​கி​னார். இதற்​கான நிதி​யைத் திரட்​டு​வதற்​காக பொருட்​காட்சி நடத்​தி​ய​வர், அதில் சேர்ந்த நிதி​யைக் கொண்டு 1950-ல் கும்​பகோணம் சாரங்​க​பாணி கோயில் சன்​னிதி தெரு​வில் சுமார் 3 ஆயிரம் சதுர அடி இடத்தை வாங்​கி​னார். அத்​தோடு அந்த முயற்சி கிடப்​பில் போன​தால், கட்சி அலு​வல​கம் கட்​டு​வதற்​காக வாங்​கப்​பட்ட இடமானது ஆக்​கிரமிப்​புக்கு உள்​ளானது. ஒரு​கட்​டத்​தில், காங்​கிரஸார் பெரு​முயற்சி எடுத்து ஆக்​கிரமிப்​பு​களை அகற்றி அந்த இடத்தை மீட்​டனர்.

Read Entire Article