‘இசைவாணி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்’ - பாஜக வழக்கறிஞர் அணி

3 months ago 15

மதுரை: ‘சபரிமலை ஐயப்பன் குறித்து சர்ச்சைக்குரிய பாடல் பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்’ என பாஜக மாநில வழக்கறிஞர் அணி தலைவர் வணங்காமுடி கூறியுள்ளார்.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் தேசிய அரசிலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஐயப்ப ராஜா தலைமை வகித்தார். பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் வணங்காமுடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வணங்காமுடி, "சபரிமலை ஐயப்பன் குறித்து அவதூறாக பாடல் பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் புகார் அளிக்கப்படுகிறது.

Read Entire Article