புதுடெல்லி: இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் சுப்மன் கில், விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஸர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகம்து ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா (முதல் இரு போட்டிகள் மட்டும்), ஜஸ்பிரித் பும்ரா (3வது போட்டி மட்டும்), வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
The post இங்கிலாந்துடன் ஓடிஐ தொடர் இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி appeared first on Dinakaran.