இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; அவர்தான் இந்தியாவின் மேட்ச் வின்னர் - மைக்கேல் கிளார்க்

1 week ago 8

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதன் காரணமாக இந்திய அணியை சுப்மன் கில் வழிநடத்துகிறார். மேலும், இந்திய அணியில் சாய் சுதர்சன், கருண் நாயர் போன்ற வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் இந்த இங்கிலாந்து தொடரில் பும்ராவை காட்டிலும் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு பவுலர் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, பும்ரா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்க்கு திரும்பி உள்ளது நிச்சயம் இந்திய அணிக்கு பலம் தான். ஆனால் தற்போதைய சூழலில் அவரைவிட இந்த இங்கிலாந்து தொடரில் குல்தீப் யாதவ் தான் முக்கிய பந்து வீச்சாளராக இருப்பார். ஏனெனில் குல்தீப் யாதவை நான் இந்திய மைதானங்களை விட வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பான பந்துவீச்சாளர் என்று கருதுகிறேன்.

இங்கிலாந்து ஆடுகளங்களில் அவர் பந்துவீசுவதை பார்க்க விரும்புகிறேன். அவர் பந்துவீசும் ஸ்டைல் நிச்சயம் வெளிநாட்டு ஆடுகளங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய ஒரு எக்ஸ்பேக்டர் வீரராகவும், மேட்ச் வின்னராகவும் இருப்பார் என்பதே எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article