ஆவுடையார்கோவில் தாலுகாவில் டிராக்டரில் மணல் அள்ளிய 2 பேர் கைது

3 months ago 14

 

அறந்தாங்கி,நவ.20: ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே டிராக்டரில் திருட்டுதனமாக மணல் அள்ளி வந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே கொழுவன் ஆற்றில் திருட்டுதனமாக மணல் அள்ளுவதாக கோட்டைப்பட்டினம் டிஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து டிஎஸ்பி அறிவுறுத்தலின்படி தனிபடை போலீசார் கொழுவன் ஆற்று பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக டிராக்டரில் திருட்டுதனமாக மணல் அள்ளிவந்தது. தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை ஓட்டி வந்த சக்திவேல்(36) வடிவேல்(38) ஆகிய 2 பேரையும் தனிபடை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து. இருவரையும் மணமேல்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்தனர்.

 

The post ஆவுடையார்கோவில் தாலுகாவில் டிராக்டரில் மணல் அள்ளிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article