ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா - டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்பு

2 weeks ago 7

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்துக்கு கூடுதலாக 433 போலீஸார் விரைவில் நியமனம் செய்யப்பட்ட உள்ளனர் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், இன்று ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தெரிவித்தார்.

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், போலீஸ் கன்வென்சன் சென்டரில் சமத்துவ பொங்கல் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது இதில், சிறப்பு விருந்தினர்களாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், ஆவடி காவல் ஆணையர் கமிஷனர் சங்கர் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்று, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, கயிறு இழுத்தல், உரி அடித்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலாச்சார போட்டிகள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், காவல் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார், அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்று அசத்தினர்.

Read Entire Article