ஆவடி | 4000 பேர் படிக்கும் கல்வி வளாகம் அருகே ரசாயன சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து

21 hours ago 2

ஆவடி: ​திரு​முல்​லை​வா​யில் பகுதி​யில் உள்ள தனியார் பள்ளியை ஒட்டி​யுள்ள தனியார் தின்னர் சேமிப்பு கிடங்​கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்​டது. திரு​வள்​ளூர் மாவட்​டம், ஆவடி அருகே திரு​முல்​லை​வா​யில் சிடிஎச் சாலை அருகே தனியார் கல்வி குழும வளாகம் உள்ளது. இந்த வளாகத்​தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியை ஒட்டி​யுள்ள இடத்​தில் தனியார் நடத்​தும் ‘தின்னர்’ எனப்​படும் ரசாயன சேமிப்பு கிடங்கு செயல்​பட்டு வருகிறது.

சார்லஸ் என்பவர் நடத்தி வந்த கிடங்​கில் தின்னர் சேமித்து வைக்​கப்​பட்டு, அம்பத்​தூர் தொழிற்​பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்டு வந்தது. இந்த சேமிப்பு கிடங்​கின் ஒரு பகுதி​யில் நேற்று பகல் 12 மணியள​வில் திடீரென தீப்​பற்றியது. தீ மளமளவென மற்ற பகுதி​களுக்​கும் பரவி கொழுந்​து​விட்டு எரிந்​தது.

Read Entire Article