ஆவடி: திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியை ஒட்டியுள்ள தனியார் தின்னர் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயில் சிடிஎச் சாலை அருகே தனியார் கல்வி குழும வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியை ஒட்டியுள்ள இடத்தில் தனியார் நடத்தும் ‘தின்னர்’ எனப்படும் ரசாயன சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.
சார்லஸ் என்பவர் நடத்தி வந்த கிடங்கில் தின்னர் சேமித்து வைக்கப்பட்டு, அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த சேமிப்பு கிடங்கின் ஒரு பகுதியில் நேற்று பகல் 12 மணியளவில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.