மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 7ம் தேதி விடுமுறை என பரவும் செய்தி வதந்தி: தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம்

4 hours ago 3

சென்னை: மொஹரம் பண்டிகை முன்னிட்டு ஜூலை 7 அரசு விடுமுறை என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

அரசு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளதாவது; “மொஹரமை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இது தவறான தகவலாகும்.

“கடந்த 26-06-2025 அன்று மொஹரம் மாத பிறை காயல்பட்டினத்தில் காணப்பட்டது. ஆகையால் 27-06-2025 தேதி அன்று மொஹரம் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே யொமே ஷஹாதத் ஞாயிற்றுக்கிழமை 06-07-2025 ஆகும்.” என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 07-07-2025 திங்கட்கிழமை அரசு விடுமுறை இல்லை.

தவறான தகவலை பரப்பாதீர்” என தெரிவித்துள்ளது.

The post மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 7ம் தேதி விடுமுறை என பரவும் செய்தி வதந்தி: தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.

Read Entire Article