பழநி, ஏப். 28: பழநியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஆளுமை திறன் பயிற்சி முகாம் நடந்தது. இதில் காப்பக மாணவர்கள், நகர்ப்புற பள்ளிகளில் உள்ள 6, 7, 8ம் வகுப்புகளில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகள் 50 பேர் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் ஆளுமை திறன் தொடர்பான பயிற்சிகள், கைவேலை, வீட்டு சாதன அழகு கலைப்பொருட்கள், மெழுகுவர்த்தி தயாரித்தல் ஆகியவை கற்று கொடுக்கப்பட்டது. மேலும் சிறந்த குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
The post ஆளுமை திறன் பயிற்சி appeared first on Dinakaran.