சென்னை: ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு சட்டப்பேரவையில் அனைத்துகட்சி உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த தீர்ப்பை அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகள் பாராட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேரவையில் பேசிய முதல்வர் இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என பெருமிதம் தெரிவித்தார்.
இதையடுத்து உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ஜெ.முகம்மது ஷாநவாஸ் (விசிக), தி.சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), எம்.எச். ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும், தமிழக அரசையும், முதல்வரையும் பாராட்டியும் பேசினர்.