ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரிய மனு உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

3 hours ago 1

புதுடெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாநிலத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது இருந்தே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இதனால், ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,‘‘ஏற்கனவே தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு ஒரு அமர்வில் நிலுவையில் உள்ளது. அதுதொடர்பாக விசாரணையும் நடத்தி வருகிறது. எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரிய மனு உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article