ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் பிப்.4ம் தேதி இறுதி உத்தரவு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு

5 months ago 14

புதுடெல்லி: தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருகிறார். இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் முன்னதாக தாக்கல் செய்யப்பட்டது. அதேப்போன்று துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்திலும் கடந்த வாரம் ஒரு புதிய ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இவை அனைத்தையும் கடந்த 17ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் தரப்பில் இருந்து ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும். இல்லை என்றால், வழக்கை நாங்களே விசாரித்து இறுதியாக தீர்த்து வைப்போம். என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விரிவாக விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதால், பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம் இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் பிப்.4ம் தேதி இறுதி உத்தரவு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article