ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றப்பட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

4 months ago 30

கும்பகோணம்: "ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றப்பட வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமாக அவர் செயல்படுவது நாட்டிற்கு நல்லது அல்ல" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கும்பகோணம் வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "தமிழக ஆளுநர் ரவி, தான் வகிக்கும் பொறுப்பை உணர்ந்து, பொறுப்புக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படவேண்டும். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ஏற்பட்ட குளறுபடி குறித்து அரசியல்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் குழந்தைகள் தவறுதலாக பாடிவிட்டதாகக் கூறுகின்றனர்.

Read Entire Article