ஊட்டி: தமிழக முதல்வரின் நடவடிக்கையால் ஆளுநரின் கடமை என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. கல்லூரி முதல்வர் நா. ராமலட்சுமி வரவேற்றார். அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் முன்னிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். பின்னர் அவர் பேசியது: “தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளார்.