இடைப்பாடி, ஏப்.25: இடைப்பாடி நகராட்சி அலுவலகத்தில், அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆணையாளர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது. இதில், இடைப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி சாலையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள அனைத்து அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்கள் மற்றும் மதம் சார்ந்த கொடிக்கம்பங்கள், சங்கங்கள் சார்ந்த கொடிக்கம்பங்களை சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், நகராட்சி 30 வார்டுகளிலும் வைக்கப்படும் கட்சி பேனர்கள் முதல் திருமணம் விசேஷ பேனர்கள் வைக்க, முன் அனுமதி பெற வேண்டும். விதி மீறி வைத்தால் அபராதம் விதிக்கப்படும். பேனர்கள் அகற்றப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.