ஆரணி அருகே அரசு இடத்தில் அனுமதியின்றி 25 பனைமரங்கள் வெட்டி கடத்தல்: விவசாயிக்கு போலீஸ் வலை

1 month ago 10

ஆரணி, ஏப். 2: ஆரணி அருகே அரசு இடத்தில் அனுமதியின்றி 25 பனைமரங்கள் வெட்டி கடத்திய விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்யூவனம் ஊராட்சி மேலேரி கிராமத்தில் அரசு புறம் போக்கு இடத்தில் உள்ள முள்வெளி மற்றும் பனைமரங்கள் உள்ளது. இந்த இடத்தில் உள்ள பனைமரங்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமலும், தகவல் தெரிவிக்காமல், மேலேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி சேட்டு என்பர், நேற்றுமுன்தினம் பனைமரங்களை வெட்டி கடத்தி சென்றதாக, வருவாய்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தாசில்தார் கவுரி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மேலேரி கிராமத்திற்கு சென்று பார்வையிட்டு, நடத்திய விசாரணையில் சேட்டு 25 பனைமரங்களை அனுமதியின்றி வெட்டி கடத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, தாசில்தார் கவுரி சேட்டு மீது ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சேட்டு மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

The post ஆரணி அருகே அரசு இடத்தில் அனுமதியின்றி 25 பனைமரங்கள் வெட்டி கடத்தல்: விவசாயிக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Read Entire Article