ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தடையாக இருக்கும் விதிகளை தமிழக அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்

6 hours ago 3

சென்னை: ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தடையாக இருக்கும் அரசாணை விதிகளை மறுஆய்வு செய்ய இதுவே சரியான தருணம் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.ராஜ்குமார் (41) என்பவர், நன்னடத்தை அடிப்படையிலும், 14 ஆண்டுகள் சிறை தண்டனையை பூர்த்தி செய்து வி்ட்டதாலும் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக அரசுக்கு விண்ணப்பித்திருந்தார்.

Read Entire Article