ஆயாவா..? அவ்வையாரா..? சட்டசபையில் எழுந்த சர்ச்சை

3 hours ago 3

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையிஉல் வேதாரண்யம் தொகுது துளியாப்பட்டினத்தில் அவ்வையார் அறிவுக் களஞ்சியம் அமைக்கப்படுமா என்று வேதாரண்யம் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதன்படி அவ்வையின் வாக்கு அமுதமானது, சிக்கனச் சொற்கள் சமூக அக்கறையாக திகழ்ந்தவை, ஆத்திச்சூட்டி உள்ளிட்ட பல பாடல்களை பள்ளிச் சிறுவர்களுக்காகவே பாடியுள்ளார். வேதாரண்யம் தொகுதியில் தமிழ்நாட்டிலேயே அவ்வையாருக்கு கோவில் இருக்கும் ஒரே ஊர். மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் அறிவுக்களஞ்சியம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சாமிநாதன், "நிதிநிலைக்கு ஏற்ப முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு அரசு பரிசீலனை செய்யும் என்று கூறினார்.

மீண்டும் பேசிய ஓ. எஸ்.மணியன், "கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தில் புத்தகங்களை வைத்தாலே போதும். இதில் நிதிப்பிரச்னை எழவில்லை. அறம்செய்ய விரும்பு தொடங்கி அருமையான அற்புதமான பாடல்களை படைத்த அவ்வையாரின் புத்தகங்களை அங்கே வைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

அதற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில், "அவ்வையார் என்பது ஒருவரல்ல, அவ்வையார் என்பது ஐந்து பேர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அறம் செய்ய விரும்பு என பாடும் அவ்வையார் வேறு, புறநானூறு பாடும் அவ்வையார் வேறு. எனவே ஐந்து அவ்வையாரில் எந்த அவ்வையாரை உறுப்பினர் குறிப்பிடுகிறார்..?" என்று கேள்வி எழுப்பினார்.

இடையில் குறிக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "ஐந்து அவ்வையார் இருக்கும் போது வேதாரண்யத்தில் இருக்கும் அவ்வையார் யார் என்பது தான் தற்போதைய கேள்வி" என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த ஓ.எஸ்.மணியன், "ஒரு காலத்தில் பாடல் பாடிய எழுதியவர்கள் பெண்களாக இருந்தால் அவர்கள் அனைவரையுமே அவ்வையார் என்று அழைத்ததாக தான் சொல்லப்படுகிறது" என்று கூறினார்.

அதற்கு அமைச்சர் துரை முருகன், "நம்ம வீட்டில் வயசானவர்களை ஆயா என்று அழைப்பது போலவா.." என்று கூறினார்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "இதுவரை அனைவரும் அவ்வையார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம். தற்போது தான் அவ்வை யார் ? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவ்வையார் என்பது பெண் இனத்திற்கு ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே விடுதலைப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்களுக்கு அமைக்கப்படும் நினைவு மண்டபங்கள், படிப்பகங்களாக அமைய வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் எண்ணம். எனவே அவ்வையார் அறிவுக்களஞ்சியம் அமைகக் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

Read Entire Article