சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகளை நீதிமன்றத்தில் வைத்து மாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹரிஹரனின் ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஹரிஹரன். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பயன்படுத்த இருந்த வெடிகுண்டுகளை உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மற்ற குற்றவாளிகளுக்கு மாற்றி கொடுத்ததாக, இந்த வழக்கின், 17-வது குற்றவாளியாக போலீஸார் இவரை கைது செய்தனர்.