ஆம்பூர் துப்பாக்கி பறிமுதல் விவகாரம்: என்ஐஏ விசாரணைக்கு தமிழக பாஜக வலியுறுத்தல்

3 hours ago 2

ஆம்பூர்: ஆம்பூரில் 4 துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த வழக்கில் 3 பேரை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் என பாஜக மாநில செயலாளர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது: "ஆம்பூரில் 4 துப்பாக்கிகள், கத்திகள் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த ஆசிஃப் மற்றும் அவரது சகோதரி ஆஜிரா, தந்தை சையத் பீர் (51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காவல் துறையினர் இந்த வழக்கில் பல விவரங்களை மூடி மறைக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக எந்த விவரங்களையும் காவல் துறையினர் வெளிப்படையாக கூறவில்லை.

Read Entire Article