ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை: குஜராத் இடைத்தேர்தலில் தனித்து போட்டி; காங்கிரஸ் அறிவிப்பு

2 hours ago 1

அகமதாபாத்: குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்றும் தனித்து போட்டியிட போவதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் விசாவதார் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ புபேந்திர பயானி, கடந்தாண்டு தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜ.வில் இணைந்தார். கடி தொகுதி பாஜ எம்எல்ஏ கர்சன் சோலங்கி பிப்.4 ம் தேதி காலமானார். இதனால் இந்த 2 தொகுதிகளும் காலியாக உள்ளன. அதற்கான இடைத்தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடப்போவதாகவும், ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்றும் அக்கட்சியின் குஜராத் மாநில தலைவர் சக்திஷ்ன் கோஹில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 3வது அணிக்கு குஜராத் மக்கள் என்றுமே ஆதரவு அளித்ததில்லை. காங்கிரஸ் அல்லது பாஜவுக்கு மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள். கடந்த முறை நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியினர் முடிந்தளவு சிறப்பாக செயல்பட்டனர்.

அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினர். ஆனால் காங்கிரசை சேதாரப்படுத்தி அவர்களால் வெறும் 11 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பெற முடிந்தது. பாஜவை வீழ்த்த காங்கிரசால் மட்டுமே முடியும். வேட்பாளர்களை ஆம் ஆத்மி வாபஸ் பெற்று கொள்ள வேண்டும். 2 தொகுதிகளிலும் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி போராடும். ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்ற போதிலும் தேசிய அளவில் நாங்கள் அனைவரும் இந்தியா கூட்டணியில் உள்ளோம்’ என்றார்.

The post ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை: குஜராத் இடைத்தேர்தலில் தனித்து போட்டி; காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article