ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்து இன்ஸ்டா பதிவு: கேரள மாவோயிஸ்ட் கைது

7 hours ago 2

நாக்பூர்,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது.

இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட்-ஹமாஸ் ஆதரவாளர் ரெஜாஸ் எம்.ஷீபா சைதீக், ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்து இன்ஸ்டாகிராம் பதிவு செய்ததைத் தொடர்ந்து அவர் நாக்பூரில் கைது செய்யப்பட்டார். 

Read Entire Article