சேலம், ஏப்.29: ஆந்திராவில் பல பகுதிகளிலும், திருவண்ணாமலை, அரூர் உள்பட பல பகுதிகளிலும் முலாம்பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதம் வரை முலாம்பழம் விளைச்சல் இருக்கும். நடப்பாண்டு முலாம்பழம் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் நல்ல விளைச்சலை தந்துள்ளது.
இதனால் ஆந்திராவில் இருந்து, கடந்த ஒரு மாதத்திற்கு ேமலாக சேலம் மார்க்கெட்டுக்கு 30 முதல் 40 டன் முலாம் பழம் விற்பனைக்கு வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் முலாம்பழத்தை சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். தற்போது நீடிக்கும் கடும் வெயில் காரணமாக முலாம் பழம் விற்பனையும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ₹20 முதல் ₹40 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ஆந்திராவில் இருந்து சேலத்திற்கு முலாம்பழம் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.