திருத்தணி: ஆந்திராவிலிருந்து திருத்தணிக்கு தனியார் பேருந்தில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் 2 பேரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பொன்பாடி சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியிலிருது திருத்தணி நோக்கி வந்த தனியார் பேருந்தில் போலீசார் சோதனையிட்டனர்.
அதில், பேருந்தின் சீட்டுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, வாலிபர்கள் 2 பேரை அழைத்துச் சென்று திருத்தணியில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவர்கள் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த குகன் (22), அரவிந்தன் (22) ஆகியோர் என்பதும், ஆந்திராவிலிருந்து கஞ்சாவை சென்னைக்கு கடத்தியதும் தெரியவந்தது. இதில் அவர்கள் கடத்திய 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட வாலிபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஆந்திராவிலிருந்து திருத்தணிக்கு தனியார் பேருந்தில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது: 5 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.