ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் அருகே தொழிலாளர்கள் சென்ற ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு

2 months ago 13

அமராவதி: ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் அருகே தொழிலாளர்கள் சென்ற ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி 7 பேர் உயிரிழந்தனர். வாழை தோட்டத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அரசு பேருந்து மோதியது. விபத்தில் பலத்த காயம் அடைந்த பேருந்தில் பயணித்த ரஞ்சனம்மா, பால கட்டையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் அருகே தொழிலாளர்கள் சென்ற ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article