சென்னை: டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழக லஞ்சஒழிப்புத் துறை போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையில், உரிய ஆதாரங்களுடன் சட்டப்பூர்வமாக சோதனை நடத்தினோம் என அமலாக்கத் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டனர். பின்னர் மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமம், மதுபான போக்குவரத்து உரிமம் போன்றவற்றில் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேலாக முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.