ஆதரவற்றோர் காப்பகத்தில் கிணற்றில் தள்ளி சிறுவன் கொலை

5 hours ago 2

ராஜபாளையம்: ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்த சிறுவனை மனநலம் பாதித்த வாலிபர் கிணற்றில் தள்ளி கொன்ற சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பில் தனியார் ஆதரவற்றோர் காப்பகம் உள்ளது. இங்கு சாய் சஞ்சீவி (6) என்ற சிறுவன் தங்கியிருந்தான். நேற்று முன்தினம் நள்ளிரவு காப்பகத்தில் சிறுவன் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது அதே காப்பகத்தில் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட நவீன் (22) என்ற வாலிபர் பின்பக்க கதவு வழியாக சிறுவனை தூக்கிச் சென்று அருகே உள்ள விவசாய கிணற்றில் தள்ளியுள்ளார்.

காலையில் சிறுவனை காப்பக உரிமையாளர்கள் தேடினர். அப்போது, நவீன் கிணற்றின் அருகே இருந்து வருவதை பார்த்துள்ளனர். சந்தேகம் அடைந்து அங்கு சென்று பார்த்தபோது, சிறுவன் கிணற்றில் சடலமாக மிதப்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து நவீனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆதரவற்றோர் காப்பகத்தில் கிணற்றில் தள்ளி சிறுவன் கொலை appeared first on Dinakaran.

Read Entire Article