ஆதரவற்ற மூதாட்டிக்கு வீடு கட்டித்தர கோரிக்கை

2 months ago 6

 

பந்தலூர்,பிப்.25:பந்தலூர் அருகே உப்பட்டி பூதானகுன்னு பகுதியில் வசித்து வரும் ஆதரவற்ற மூதாட்டிக்கு வீடு கட்டி தர கோரிக்கை விடுத்துள்ளார். பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட உப்பட்டி பூதானகுன்னூ பகுதியில் வசித்து வரும் வேலாயி (80).கணவன் இறந்துவிட்ட இவர் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

முறையான வீடு இல்லை. குடியிருக்கும் வீடு பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் குடியிருக்க முடியாமல் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது,தனக்கு முறையான வீடு கட்டி தர வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறுகின்றார். எனவே இவருக்கு அரசு மூலம் வீடு கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

The post ஆதரவற்ற மூதாட்டிக்கு வீடு கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article