ஆண்டுதோறும் கடைபிடிக்கும் மரபுப்படி சென்னை உயர் நீதிமன்ற வாயில்கள் மூடல்

2 months ago 10

சென்னை: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர் நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் அது அதிக தூரமாக கருதி, உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர்.

இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், மக்கள் வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை உரிமை கோரிவிடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத் தின் அனைத்து வாயில்களையும் ஆண்டுக்கு ஒரு நாள் என்ற வகையில் மூடப்படும் என்று அறிவித்தது.

Read Entire Article