ஆண்டிபட்டி மீன் வியாபாரி கொலையில் 2 பேர் கைது

2 months ago 12

ஆண்டிபட்டி, நவ. 5: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன்(59). இவர் வைகை அணை சாலையில் சீதாராம்தாஸ் நகர் பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்தார். ஆண்டிபட்டி ஆரோக்கிய அகம் மருத்துவமனை பின்புறம் பகுதியை சேர்ந்தவர் அன்பு என்ற சிவக்குமார்(54). இவர் ஜாகிர் உசேனின் நண்பன். அன்பு என்ற சிவக்குமாருக்கும், ஜாகிர் உசேனின் மனைவி ரிஷ்வனா(47) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி ஜாகிர் உசேன் வீட்டில் இருவரும் மது குடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட பிரச்சனையால் ஜாகிர் உசேனை அன்பு என்ற சிவக்குமார் மற்றும் மனைவி ரிஷ்வனா ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆண்டிபட்டி போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வந்தனர். இதில் நேற்று முன்தினம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post ஆண்டிபட்டி மீன் வியாபாரி கொலையில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article