
சென்னை
திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு கடைசியில் கைவிட்டுவிடுவது பல இடங்களில் நடைபெற்று வருகிறது. திருமண வாக்குறுதியை நம்பி காதலில் விழுந்து, கடைசியில் எல்லை மீறும் ஆண்களால் வாழ்க்கையில் பல பெண்கள் சிக்கலை சந்திக்கிறார்கள். இதில் பெண் போலீசாரும் விதிவிலக்கு அல்ல. பெண் போலீஸை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த காவலர் மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகியோர் கைதாகி உள்ளனர்.
தாம்பரம் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் போலீசுக்கும் ஆவடி முதல் நிலை காவலரான வீரமணி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
30 வயதான பெண் போலீசுக்கு திருமணமாகவில்லை. அவரது குடும்பத்தினர் மதுரையில் உள்ளனர். சேலையூர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி பணிக்கு சென்று வந்துள்ளார். கபடி பயிற்சியாளரான காவலர் வீரமணிக்கு - பெண் போலீசுக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலர்களாக உலா வந்தனர். வீரமணி வீட்டில் யாரும் இல்லாத போது தனது காதலியான பெண் போலீசை வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.
இன்னும் எத்தனை நாள் தான் காதலர்களாக இருப்பது இருவரும் திருமணம் செய்துக்கொள்ளலாம் நீங்கள் உங்க வீட்டில் பேசிவிட்டு சொல்லுங்கள் என அந்தப்பெண் போலீஸ் கூறியுள்ளார். பெண் போலீசின் பேச்சை காவலர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் நாளுக்கு நாள் திருமணம் செய்துக்கொள்ளுமாறு அந்த பெண் போலீஸ் அவரை வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் வீரமணி சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சரத்குமார் என்பவரை பெண் போலீசுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. வீரமணி - பெண் போலீசுக்கு இடையே பழக்கம் சரத்குமாருக்கு தெரிந்ததால் ஆதரவாக பேசுவது போல் பேசி பெண் போலீசுடன் நெருக்கம் காட்டியுள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். அதனை நம்பியவர் ஆட்டோ டிரைவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதன்காரணமாக அந்தப்பெண் கர்ப்பமடைந்துள்ளார். இந்த விவகாரம் ஆட்டோ டிரைவருக்கு தெரியவர தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளார்.
நாம் இருவரும் திருமணம் செய்துக்கொள்வோம் என பெண் போலீஸ் கேட்க அப்போது தான் சரத்குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. நண்பர்களான வீரமணியும்- சரத்குமார் தங்களது தேவைக்காக தன்னை பயன்படுத்திக்கொண்டதை தாமதமாக அறிந்துக்கொண்ட பெண் இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் செய்தார். அதன்பேரில் சேலையூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணி, அவரது நண்பரான ஆட்டோ டிரைவர் சரத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.