‘ஆக்‌ஷன்’ அமித் ஷா... சரண்டர் இபிஎஸ்..! - அடுத்தடுத்து நடக்கப்போவது என்ன?

1 month ago 8

‘2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’- டெல்லியில் இபிஎஸ் தன்னை சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட இந்த எக்ஸ் தள பதிவு மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைவதற்கு கட்டியம் கூறி இருக்கிறது.

அமித் ஷா உடனான 45 நிமிட சந்​திப்​புக்​குப் பின் செய்​தி​யாளர்களிடம் பேசிய, இபிஎஸ். “இந்த சந்​திப்​பில் கூட்​டணி குறித்து பேசவில்​லை. கூட்​டணி வேறு, கொள்கை வேறு. தேர்​தல் நெருங்​கும்​போது சந்​தர்ப்ப சூழ்​நிலைக்கு ஏற்ப கூட்​டணி மாறும்” என்று மட்டும் சொன்​னார்.

Read Entire Article