சென்னை: அவிநாசி, மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கத்திற்காக 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை தர பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் -அவிநாசிக்கு இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மரங்கள் வெட்டியது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. மரங்களை வெட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட குழுவின் அனுமதி பெற்றதா? என தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
The post அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கம்: மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக அரசு பதில் தர பசுமை தீர்ப்பாயம் ஆணை appeared first on Dinakaran.