அழகியபாண்டியபுரத்தில் ஆபத்தான மின்கம்பம் மாற்றப்படுமா?

2 months ago 8

மானூர்,நவ.27: மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் குடியிருப்பு பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் பிள்ளைமார் தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பம் அடிப்பகுதி மிகவும் மோசமான நிலையில் உடைந்து விழுந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்ட் துண்டுகள் நொறுங்கி விழுந்து கம்பிகள் வெளியே வந்து தெரிவதால் மின்வாரியத்துக்கு தகவல் கொடுத்த அப்பகுதி குடியிருப்பு மக்கள், அதனை சிமெண்ட் கலவை கொண்டு பூசி சரி செய்தனர். இருப்பினும் மின்கம்பம் வெளியே தெரிவதோடு உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அழகியபாண்டியபுரத்தில் ஆபத்தான மின்கம்பம் மாற்றப்படுமா? appeared first on Dinakaran.

Read Entire Article