அல்லூர் திருவடக்குடி மகாதேவர் கோயில்

1 day ago 4

ராஜகோபுர தரிசனம்!

அல்லூர் திருவடக்குடி மகாதேவர் கோயில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவேரி நதியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பண்டைய சிவன் கோயிலாகும். இது ‘பஞ்சநதீஸ்வரர் கோயில்’ என்ற பெயராலும் அறியப்படுகிறது. இக்கோயில் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் ஆகியோரால் கட்டப்பட்டுள்ளது.

பழைய கல்வெட்டுகளில் இத்தலம் ‘திருவடக்குடி’ எனவும், இறைவன் ‘திருவடக்குடி மகாதேவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுந்தர சோழர் காலத்தில் வீரசோழ இளங்கோவேலின் மகன் பராந்தகன், கோயிலுக்காக தங்க நித்திய விளக்கினை தானமாக வழங்கினார். பராந்தக சோழர் காலத்தில் வெள்ளச் சேதம் காரணமாக, பயிரிட முடியாத நிலங்கள் கோயிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்டன.

இத்தலம் வரலாற்று, கலாச்சார, சுற்றுச்சூழல் மற்றும் ஆன்மிகம் போன்றவற்றின் தமிழ்நாட்டின் முக்கிய சிவன் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலின் ராஜகோபுரம் ஐந்தடி உயரம் கொண்டது. இத்தலத்தில் மூலவராக பஞ்சநதீஸ்வரர், அன்னை தர்மசம்வர்த்தினி அருள்பாலித்து வருகிறார்கள். கோயிலின் விமானம் வசரா பாணியில் இரு நிலைகள் கொண்டது. ராஜகோபுரத்தின் மேல்பாகத்தில் பாண்டியர் சின்னம் காணப்படுகிறது.

கோயிலின் ராஜகோபுரம் ஆனது ஐந்து நிலைகளைக் கொண்டதொரு சிறப்பான கட்டடமாகும். இதன் கட்டிட வடிவமைப்பில் பண்டைய திராவிடக் கட்டிடக்
கலையின் சீரான அம்சங்கள் பிரதிபலிக்கின்றன.தாழ்வாக இருந்து மேலே உயரும் மாதிரியான வடிவமைப்பில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, பார்க்கும் போது வானத்தை தொடும் உயரமுடையதாக கோபுரம் காட்சியளிக்கும்.

கோபுரத்தின் மேல் அடுக்குப் பகுதியில் பாண்டிய மன்னர்களின் சின்னங்கள் காணப்படுகின்றன. இது பாண்டியர்களால் இக்கோபுரம் கட்டப்பட்டதையும், பின்னாளில் அவர்கள் மேற்கொண்ட பணி என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொரு நிலையிலும் சிற்பக்கலை சிறப்பாகவே காணப்படுகிறது. இதில் தேவதைகள், யாளிகள், முனிவர்கள், சிவபெருமானின் பராகரூபங்கள் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன.

கோபுரம் மட்டும் அல்லாமல், மூலவரின் மீது அமைந்த விமானமும் வசரா பாணியில் அமைந்துள்ளது. இது வட இந்திய மற்றும் தென் இந்திய கட்டிடக் கலையின் கலவையாகும். இக்கோபுரம், நெடுந்தொலைவில் இருந்தே பக்தர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அதனால் அக்கிராமத்தின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது.

கோபுரத்தின் ஒவ்வொரு கட்டுமான நுணுக்கத்திலும், சிற்ப ஒழுங்கிலும் சோழர் மற்றும் பாண்டியர் காலத்தின் கலையும் ஆன்மீகமும் இணைந்துள்ளதைக் காண முடிகிறது. தமிழகத்து கோபுரக் கலையின் ஒரு அழகிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தொகுப்பு: திலகவதி

The post அல்லூர் திருவடக்குடி மகாதேவர் கோயில் appeared first on Dinakaran.

Read Entire Article