அலைமோதிய பயணிகள் கூட்டம்

4 months ago 13

சேலம், ஜன.19: பொங்கல் விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுகிறது. அவரவர் பணிக்கு செல்ல ஊர்களுக்கு திரும்பியதால் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த நான்கு நாட்களாக கொண்டாடப்பட்டது. தொடர் விடுமுறையையொட்டி வௌியூர்களில் தங்கி பணி செய்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், உறவினர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் தாங்கள் பணி செய்யும் இடத்திற்கு திரும்பினர். இதன் காரணமாக சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பயணிகளின் கூட்டம் இருந்தது. குறிப்பாக சென்னை, பெங்களூர், ஓசூர். வேலூர், விழுப்புரம், திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மிக அதிகப்படியான மக்கள் பயணம் செய்தனர். பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

The post அலைமோதிய பயணிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article