சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துபவர்களால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று 379 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு 31 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து, ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.