“அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா?” - ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி

1 week ago 8

சென்னை: “கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்தபடி கூறுவதுதான் அரைவேக்காட்டுத்தனம்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக, தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “செய்திகளை பார்க்காமல், படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமான அரசியலை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. உட்கட்சி பிரச்சினை, கூட்டணி பிரச்சினையை மறைக்க அறிக்கை அரசியல் செய்து வருகிறார். திமுக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை.” என்று விமர்சித்திருந்தார்.

Read Entire Article