அரவக்குறிச்சியில் முதல்வர் மருந்தகம் திறப்பு

3 hours ago 2

 

அரவக்குறிச்சி, பிப் 25: அரவக்குறிச்சியில் முதல்வர் மருந்தகம் திறப்பு, சலுகை விலையில் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருந்தகங்களில் ரூ.70-க்கு கிடைக்கும் மாத்திரை, முதல்வர் மருந்தகத்தில் வெறும் ரூ.11 மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியில் நடைபெற்ற முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன் கலந்து கொண்டு மருந்தகத்திற்கு வந்த நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post அரவக்குறிச்சியில் முதல்வர் மருந்தகம் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article