அரவக்குறிச்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

3 months ago 10

 

அரவக்குறிச்சி. நவ.27: அரவக்குறிச்சி பேருராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைக்காலத்தின் காரணமாக கொசு உருவாதல் பெருகிவருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டெங்கு பரவும் நிலை உள்ளது. இந்நிலை ஏற்படாமலிருக்க கரூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி அரவக்குறிச்சி பேருராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக பேருராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் பேருராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு வாகனத்தில் மாலதின் கொசு ஒழிப்பு மருந்து கலந்த புகை தெருக்களில் பீச்சியடிக்கப்படுகிறது. கைக்கருவிகள் மூலம் வீடுகளிலும் கொசு ஒழிப்பு புகை அடிக்கப்படுகிறது. இதன் மூலம் முற்றிலும் டெங்கு ஒழிப்புப்பணி அரவக்குறிச்சி பேருராட்சியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post அரவக்குறிச்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article