அரசுப் பள்ளி ஆசிரியர் படுகொலை: தமிழகம் முழுவதும் டிட்டோஜேக் போராட்டம்

3 months ago 15

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் டிட்டோஜேக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மல்லிப்பட்டிணம் அரசுப் பள்ளி வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியை ரமணி புதன்கிழமை கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆசிரியர் கொலையை கண்டித்தும், பணிப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Read Entire Article