அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்: 45,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

3 months ago 17

சென்னை: சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று முன்தினம் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜிக்கு அந்த மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவர்தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை புறக்கணிப்பதாக அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. தர்ணா போராட்டம், ஒத்துழையாமை போராட்டம் நடத்தப்படும் என அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினரும் அறிவித்தனர்.

Read Entire Article