அரசு மருத்துவமனைகளில் உள்ள 2,642 மருத்துவர் காலி பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்

6 hours ago 2

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2,642 மருத்துவர் பணியிடங்களுக்கு மருத்துவர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது. வரும் 15-ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு 4,585 மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் வரும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2,553 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 5-ம் தேதி நடந்த தேர்வில், எம்பிபிஎஸ் முடித்த 24 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றனர். கூடுதலாக 89 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரிக்கப்பட்டது.

Read Entire Article