அரசு பஸ்களில் ஒரே நாளில் 75,000 பேர் முன்பதிவு செய்து பயணம் இது வரலாற்றில் இல்லாத சாதனை: அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்

2 months ago 10


அரியலூர்: அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேவைப்படும் அளவிற்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தனியார் பேருந்துகளும் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. இந்தாண்டு அரசு பேருந்துகளில் 5,75,000 பேர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றனர்.

இது கடந்த ஆண்டை விட மிகப்பெரிய கூடுதலான எண்ணிக்கையாகும். கடந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்தார்கள். இவ்வாண்டு ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். அதேபோல் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு 3ம் தேதி ஒரே நாளில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து பயணித்தார்கள். இது வரலாற்றில் இல்லாத ஒரு சாதனையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசு பஸ்களில் ஒரே நாளில் 75,000 பேர் முன்பதிவு செய்து பயணம் இது வரலாற்றில் இல்லாத சாதனை: அமைச்சர் சிவசங்கர் பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article