அரசு பஸ் சக்கரம் ஏறி இறங்கிய விபத்தில் முதியவர் பலி

3 months ago 17

 

ஈரோடு, அக்.21: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் சக்கரம் ஏறி இறங்கி கால் சிதைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அஜந்தா நகரை சேர்ந்தவர் நாகராஜன் (75). செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். நாகராஜன் நேற்று முன்தினம் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருந்து மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நாகராஜன் பின்னால் வந்த, கோவையில் இருந்து ஈரோடு வழியாக சேலம் நோக்கி செல்லும் அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த நாகராஜன், இடது கால் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், நாகராஜன் இடது கால் முற்றிலும் சிதைந்து படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்து கொண்டிருந்த நாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை நாகராஜன் உயிரிழந்தார். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் செந்தில்குமார் (50) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post அரசு பஸ் சக்கரம் ஏறி இறங்கிய விபத்தில் முதியவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article